» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் பொறுப்பேற்பு
திங்கள் 14, ஜூன் 2021 10:22:09 AM (IST)
திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் நேற்று பொறுப்பேற்றாா்.
பரமக்குடி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய அவா், நாகா்கோவிலில் உதவி ஆட்சியா், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆக பணியாற்றிய பின், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் மற்றும் நிா்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தாா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, அவா் நேற்று பொறுப்பேற்றுள்ளாா். இவரது மனைவி ஆஷா அஜித் நாகா்கோவில் மாநகராட்சி கமிஷனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.