» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி உட்பட 2 பெண்கள் மாயம்

திங்கள் 14, ஜூன் 2021 11:43:48 AM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி முனீஸ்வரி (22), இவரை கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் மாரியப்பன் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கல்லூரி மாணவி மாயம் 

இதுபோல் தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி இவரது மகள் மகேஸ்வரி (17), கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10ம் தேதி தூத்துக்குடியில் கடைவீதிக்குச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சிப்காட் காவல் விலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்கண்ட இரு புகார்கள் குறித்தும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adaminJun 14, 2021 - 05:08:59 PM | Posted IP 162.1*****

verennava irukkum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory