» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓடும் பேருந்தில் நகை திருட்டு: 3 பெண்கள் கைது

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 11:23:21 AM (IST)



தூத்துக்குடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 1¾ பவுன் தங்கச் செயினை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் நடுவகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மனைவி பாப்பா (55). இவர் நேற்று தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் பஸ்சில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் செயினை யாரோ திருடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பா தனது செயின் திருடுபோனதாக கூச்சலிட்டார். 

இதையடுத்து பேருந்தை டிரைவர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் நிறுத்தினார். பின்னர் பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கோவில்பட்டி குருமலையைச் சேர்ந்த ராஜ் மனைவி ராணி (30), வேலு மனைவி ராதா (49), மந்தித்தோப்பு நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி அபிராமி (29) ஆகிய மூவரும் செயினை கத்திரிக்கோலால் வெட்டி திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப் பதிந்து 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

JeyakumarAug 3, 2021 - 05:55:44 AM | Posted IP 162.1*****

நம் சட்டத்தில் சரியான தண்டனை இல்லை. எனவே தவறுகள் தொடர்ந்து நடக்கிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory