» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் போட்டியில் வாலிபர் வெட்டிக் கொலை: நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம்!!

திங்கள் 2, ஆகஸ்ட் 2021 4:57:28 PM (IST)

கோவில்பட்டி அருகே, தான் காதலித்த பெண்ணை, நண்பனும் காதலித்ததால் ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாமொழி மகன் மதன்குமார் (21). பெயின்டர் வேலை பார்த்து இவர், கடந்த 30ம்தேதி மந்தித்தோப்பு காட்டு பகுதியில் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்ஐக்கள் குருசித்திர வடிவேல், மாதவராஜ், நாராயணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேசன் (18) என்பவரை கைது செய்தனர். மேலும் காதல் போட்டியில் அவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. போலீசில், முருகேசன் அளித்துள்ள வாக்குமூலம்: நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம். நான் ஒரு இளம்பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான். இந்த விவரம் எனக்கு தெரியாது. 

சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் அவன் சார்ட்டிங் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் நான், மதன்குமாரை கண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அரிவாளை மறைத்து வைத்தேன். அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து மது குடிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன். 

அங்கு வைத்து இருவரும் மது அருந்தினோம். அதன்பிறகு நான், சிறுநீர் கழித்து வருவதாக மதன்குமாரிடம் கூறிச் சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்தேன். அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னால் வந்த நான், மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன். இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தான். அதன் பிறகு அரிவாளை அங்குள்ள கண்மாயில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டேன். நான், கதிரேசன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள புலிக்குகை பகுதியில் பதுங்கியிருந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர், வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

S JEYARAMANJun 23, 1628 - 06:30:00 PM | Posted IP 108.1*****

வி வி டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் அருகில் மெடிக்கல் முன்புறம் வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த ரோட்டிட்ற்கு இடையூறு செய்து மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் இதன் மூலம் தகவல் கொடுக்க கடமைபாடு இருக்கிறன்.

உண்மைAug 2, 2021 - 05:19:53 PM | Posted IP 108.1*****

தூக்குத் தண்டனை தான் தீர்வு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory