» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் பரபரப்பு அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 10:14:36 AM (IST)

ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாக வலசை கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலசை, பாலா அருணாசலபுரம், கரடிகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது கம்பனேரி கிராம பஞ்சாயத்து ஆகும். வலசை கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த தேர்தல் வரை வாக்களித்து வந்தனர். 

இந்நிலையில் தற்போது பாதுகாப்பு கருதி அனைத்து வாக்குச்சாவடிகளும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலசை கிராமத்தில் தக்கம்மாள் கோவில் தெரு பகுதியில் குடியிருக்கும் வாக்காளர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், வாக்குச்சாவடி மாற்றத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் மற்றும் சுவரொட்டி ஒட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory