» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காயங்குளம் - நெல்லை இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, செப்டம்பர் 2021 10:58:19 AM (IST)
பாலம் பராமரிப்பு பணி காரணமாக காயங்குளம் - திருநெல்வேலி இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.