» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை

வெள்ளி 24, செப்டம்பர் 2021 11:12:28 AM (IST)

ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுறது.

தென்காசி  மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலுக்கு ஆயத்தமாக இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. 

எனவே அவர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இன்று தென்காசி  மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கபீர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory