» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

வெள்ளி 24, செப்டம்பர் 2021 3:54:36 PM (IST)

நெல்லை யில் 17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மாடசாமி (19). இவருக்கும் பாளையை சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து புகாரின் பேரில் சமூகநல அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மைனர் பெண்ணை மாடசாமி திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து சமூகநல விரிவாக்க அலுவலர் பார்வதி, மல்லிகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். மைனர் பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory