» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் விபத்தில் விசாயி பலி: மகள்கள் உட்பட 3பேர் காயம்

வியாழன் 14, அக்டோபர் 2021 10:26:43 AM (IST)

சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் விவசாயி உயிரிழந்தார். அவரது 2 மகள்கள் உட்பட 3பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(65) விவசாயி.  இவர் தனது மகள்கள் பொன்னுத்தாய், விஜயகுமாரி ஆகியோர்களுடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.  

அப்போது அதே ஊரை சேர்ந்த குருசாமி (56) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.  இதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் சக்திவேல் காயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் குருசாமி, பொன்னுத்தாய், விஜயகுமாரி ஆகியோர் காயமடைந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory