» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ் 2 மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயம்

சனி 16, அக்டோபர் 2021 12:08:20 PM (IST)

தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் பிளஸ் 2 மாணவி உட்பட 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி, வள்ளிநாயக புரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மகள் ஜென்பி (16), தூத்துக்குடியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி முதல் இவரை காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம் 

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் அருகேயுள்ள பள்ளிவாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகள் கார்த்தீஸ்வரி (21). இவரை கடந்த 14ம் தேதி காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

பொது ஜனம்Oct 16, 2021 - 02:32:40 PM | Posted IP 162.1*****

பெண்கள் டிவி சீரியல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளுக்கு முக்கியான கரணம் இந்த தொலைக்காட்சி சீரியல் தான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory