» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி : மேலும் ஒருவர் காயம்

திங்கள் 6, டிசம்பர் 2021 8:50:23 AM (IST)

நெல்லை அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயரிழந்தனர். மேலும் ஒருவர் காயம் அடைந்தார். 

நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பாலேஸ்வரி (30), மற்றொரு முருகன் மனைவி முத்துமாரி (35) மற்றும் வள்ளியம்மாள் (61) ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை மேலப்பாளையம் கருங்குளம் அருகேயுள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய துவங்கியது. இதில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை திடீரென மின்னல் தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே பாலேஸ்வரி, முத்துமாரி ஆகியோர் இறந்தனர். படுகாயத்துடன் இருந்த வள்ளியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி பாலஸே்வரி, முத்துமாரி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory