» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி நகர் பகுதிகளில் டிச.9ம் தேதி மின்தடை

செவ்வாய் 7, டிசம்பர் 2021 5:16:03 PM (IST)

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நகரின் பல பகுதிகளில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய (விநியோகம்) செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மின் பாதையில் வருகிற 9ம் தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நாட்டுக்கோட்டை தெரு, முத்துநகர் பீச் பகுதிகள், ரயில்வே ஸ்டேஷன் வளைவு ரோடு, பீச் ரோடு, இனிகோ நகர், ரோச் காலனி, மினி சகாயபுரம், லயன்ஸ் டவுண் 7வது தெரு, மாதாத் தோட்டம், பீச் ரோடு, புதிய எஸ்எஸ் வளாகம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை மதியம் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பண்டாரம்பட்டி உயரழுத்த மின் பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மில்லர்புரம், சின்னமணி நகர், அண்ணா நகர் 2 மற்றும் 3வது தெருக்கள், பால்பாண்டி நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி 5வது தெரு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

BalamuruganDec 8, 2021 - 11:14:36 AM | Posted IP 173.2*****

Thanks

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory