» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓட்டலை சூறையாடிய சம்பவத்தில் வாலிபர் கைது

திங்கள் 17, ஜனவரி 2022 10:24:54 AM (IST)

நாங்குநேரி அருகே ஓட்டலை சூறையாடிய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அந்தோணி அல்போன்ஸ் விஜய் (45). இவர் நாங்குநேரி அருகே வாகைக்குளம் நாற்கர சாலையோரம் தொழில்நுட்ப பூங்கா எதிரில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஓட்டலில் சாப்பிட்டவர்களிடம் பணம் கேட்டபோது தகராறு செய்தனர். 

இரவில் இவர் ஓட்டலை பூட்டி விட்டு சென்ற பின்னர், தகராறு செய்த அந்த கும்பல், ஓட்டலின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சூறையாடியது. இதுபற்றிய புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தென்னிமலையைச் சேர்ந்த அருணாசலம் (28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மேலும் பல நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory