» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் மூழ்கி சட்டக் கல்லூரி மாணவர் பலி

திங்கள் 17, ஜனவரி 2022 10:28:46 AM (IST)

மேலநீலிதநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கி சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் குருக்கள்பட்டி அருகே நடுவக்குறிச்சி மைனர் பஞ்சாயத்து சூரங்குடியைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவருடைய மகன் தர்மராஜ் (வயது 20). இவர் நெல்லையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று  தன்னுடைய நண்பர்களுடன் அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

தர்மராஜிக்கு நீச்சல் தெரியாததால், இடுப்பில் கயிறு கட்டி கிணற்றில் நீச்சல் பழகினார்.அப்போது அவரது இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளது. இதனால் தர்மராஜ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தர்மராஜின் உடலை  மீட்டனர்.அவரது உடலை சின்ன கோவிலாங்குளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி   வைத்தனர். இதுகுறித்து   போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory