» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் : இடஒதுக்கீடு விபரம் அறிவிப்பு
செவ்வாய் 18, ஜனவரி 2022 3:13:20 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆகிய 6 நகராட்சிகளில் புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி எஸ்.சி பெண், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பொது பெண், சங்கரன்கோவில் நகராட்சி பகுதி பெண் பொது, பிரிவிற்கும் தென்காசி நகராட்சி பொது பிரிவிற்கும், கடையநல்லூர் - பொது பிரிவிற்கும், சுரண்டை - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 18 பேரூராட்சி தலைவர்கள் பதவிக்கு இலஞ்சி - எஸ்சி பெண், சுந்தரபாண்டியபுரம் - எஸ்சி பெண், திருவேங்கடம் - எஸ்சி பொது, புதூர் (செ) - எஸ்சி பொது, ஆய்க்குடி - எஸ்.சி பொது, ஆழ்வார்குறிச்சி - பெண் பொது ராயகிரி - பெண் பொது, ஆலங்குளம்- பெண் பொது, வாசுதேவநல்லூர் - பெண் பொது, மேலகரம் - பெண் பொது, சிவகிரி - பெண் பொது, குற்றாலம் - பொது, பண்பொழி - பொது, வடகரை கீழ்பிடாகை - பொது, அச்சன்புதூர் - பொது, சாம்பவர்வடகரை - பொது, கீழப்பாவூர் - பொது, முக்கூடல் - பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.