» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கூடுதல் தலைமைச்செயலாளர் ஆய்வு
செவ்வாய் 18, ஜனவரி 2022 3:27:58 PM (IST)

நெல்லையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சீர்மிகு திட்டத்தின கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சீர்மிகு திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், முன்னிலையில் இன்று (18.01.2022); கொக்கிரக்குளம் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை மண்டலத்தில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.14.95 கோடி மதிப்பிட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வரும் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொக்கிரகுளம் பகுதியில், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரூ.85.56 கோடி மதிப்பிட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சந்திப்பு பேரூந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், சந்திப்பு பகுதியில் பாதள சாக்கடை மூலம் கழிவு நீர் தடையின்றி செல்வதற்கான அமைக்கப்பட உள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளையும், நயினார்குளம் கரை சீரமைப்பு பணிகளையும் பார்வையிற்று ஆய்வு செய்து ராமையன் பட்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் பழைய குப்பைகளை தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை நவீனமுறையில் உரமாக்கும் திட்டத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளைகேட்டு கொண்டனர். ஆய்வின் போது மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் (பொ) நாராயணன் உட்பட மாநகர அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!
சனி 25, ஜூன் 2022 5:00:53 PM (IST)

தபால்காரர்களிடம் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்: அதிகாரி தகவல்!
சனி 25, ஜூன் 2022 4:12:02 PM (IST)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்: டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு
சனி 25, ஜூன் 2022 4:09:57 PM (IST)

மாணவர்களை மாற்றியதைக் கண்டித்து 2வது நாளாக பெற்றோர்கள் போராட்டம் : நெல்லையில் பரபரப்பு!
வெள்ளி 24, ஜூன் 2022 4:10:50 PM (IST)

பள்ளி மாணவி கர்ப்பம்: ஆசிரியரிடம் விசாரணை!
வெள்ளி 24, ஜூன் 2022 12:29:24 PM (IST)

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல் : சிறுவன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 24, ஜூன் 2022 11:36:09 AM (IST)
