» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மளிகைகடையில் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருட்டு

செவ்வாய் 18, ஜனவரி 2022 9:10:28 PM (IST)

விளாத்திகுளத்தில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜ் நகரை சேர்ந்த கனிராஜ் மகன் ஸ்டாலின் (43). இவர் விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர் சிலை அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்துள்ளது. கடைக்குள் சென்று அவர் பார்த்தபோது, கல்லா பெட்டியில் அவர் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

thambiJan 19, 2022 - 07:15:07 AM | Posted IP 173.2*****

area apdi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory