» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
புதன் 19, ஜனவரி 2022 3:44:01 PM (IST)
ஆலங்குளம் அருகே போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் விமலா (32). தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். பொங்கல் தினத்தன்று ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை சந்திப்பதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் திரும்பி வரும்போது நெட்டூர் பஸ்நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு சிலர் நின்றுள்ளனர். வழி விடுமாறு கூறிய விமலாவை அந்த நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த விமலா அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (27), மாரியப்பன் (20), கண்ணன் (25), முருகன் (35) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் உடையாம்புளியில் பதுங்கியிருந்த வேல்முருகனை, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்தநிலையில் இவ்வழக்கில் முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கண்ணன், மாரியப்பனை ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.