» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கரோனாவால் இறந்தவருக்கு தடுப்பூசி சான்றிதழ் : குடும்பத்தினர் அதிர்ச்சி
புதன் 19, ஜனவரி 2022 9:43:15 PM (IST)
விளாத்திகுளத்தில் கரோனாவால் உயிரிழந்தவருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த வில்வமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜப்பா(72). கடந்த ஏப்ரல் 13ல் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய நிலையில், கடந்த ஆண்டு மே 20ம் தேதி கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜன.,18) ராஜப்பா பயன்படுத்திய மொபைல் போனுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோவிட்டால் இறந்தவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த குறுஞ்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
adaminJan 20, 2022 - 08:45:18 AM | Posted IP 173.2*****