» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் உதயநிதி பெயரில் இருந்த கடை அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வியாழன் 20, ஜனவரி 2022 3:25:03 PM (IST)
தூத்துக்குடியில் உதயநிதி உதவியால், மாற்றுத்திறனாளி கட்டிய கடையின் சுற்றுச்சுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜஸ்டின். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வரை பயணித்து திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை சந்தித்து தனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு அளித்த உதவுமாறு மனு அளித்தாா். இதையடுத்து, தூத்துக்குடியில் பழச்சாறு கடை அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி துணைச் செயலா் எஸ். ஜோயல் மூலம் ராஜாஜி பூங்கா அருகே கடை அமைக்க ஏற்பாடு செய்துகொடுத்தாா்.
மேலும், அந்தக் கடைக்கு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் ஏற்பாடு செய்தாா். இந்நிலையில், பழச்சாறு கடையை சுற்றி ஜஸ்டின் சுவா் அமைத்திருந்தாா். இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரை அடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஜூஸ் கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
ஓJan 20, 2022 - 04:30:59 PM | Posted IP 108.1*****
அரசியல்வாதிகளை நம்பி இப்படி போனால் கடைசியில் இப்படித்தான்
தமிழன்Jan 20, 2022 - 10:05:31 PM | Posted IP 108.1*****