» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் மூழ்கி பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு: நண்பர்கள் கண் முன்னே பரிதாபம்!

வெள்ளி 21, ஜனவரி 2022 10:14:22 AM (IST)

வீரகேரளம்புதூர் அருகே கிணற்றில் மூழ்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி  மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் சரவணன் (வயது 27). பொறியியல் பட்டதாரி. நேற்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக தன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.குளித்து முடித்து மேலே ஏறியபோது மயக்கமாக வருகிறது எனக் கூறிய படியே சரவணன் மீண்டும் தண்ணீரில் விழுந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். 

ஆனால் அதற்குள் சரவணன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இச்சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் போலீசுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடியும் சரவணனின் உடலை மீட்க முடியவில்லை. 

இந்நிலையில் கீழப்பாவூர் அருகிலுள்ள கருமடையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் முப்பிடாதி (82) என்பவருக்கு தகவல் தந்தனர். அங்கு வந்த அவர் 50 அடி ஆழத்திற்கும் கூடுதலாக தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் மூழ்கிச் சென்று சரவணனின் உடலை மீட்டு கொண்டு வந்தார். இதனையடுத்து  அவரது உடல் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரகேரளம்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory