» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்ஸ் வீட்டில் கதவை உடைத்து 50 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 21, ஜூன் 2022 10:13:39 AM (IST)
வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெல்லை மாவட்டம் வள்ளியூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி மரியதாசன். இவரது மனைவி கிறிஸ்டி சகாயராணி அரசு செவிலியராக வேலை செய்து வருகிறாா். மரியதாசன் கோவனேரியில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று வழக்கம் போல் சென்றுவிட்டாராம். மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மரியதாசன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்பட 50 தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் ராஜலெட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். திருட்டு போன வீட்டை வள்ளியூா் ஏ.எஸ்.பி.சமய்சிங் மீனா பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். திருநெல்வேலியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)
