» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்ஸ் வீட்டில் கதவை உடைத்து 50 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 21, ஜூன் 2022 10:13:39 AM (IST)
வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெல்லை மாவட்டம் வள்ளியூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி மரியதாசன். இவரது மனைவி கிறிஸ்டி சகாயராணி அரசு செவிலியராக வேலை செய்து வருகிறாா். மரியதாசன் கோவனேரியில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று வழக்கம் போல் சென்றுவிட்டாராம். மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மரியதாசன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சங்கிலி, கம்மல், வளையல் உள்பட 50 தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் ராஜலெட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். திருட்டு போன வீட்டை வள்ளியூா் ஏ.எஸ்.பி.சமய்சிங் மீனா பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். திருநெல்வேலியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

