» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை : நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 21, ஜூன் 2022 12:59:04 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி, சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன் (52). இவரது மகன் காசிராஜன் (35), லாரி டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி குடும்ப பிரச்சனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், காசி ராஜனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே சொத்துப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை தமிழ் அழகன் மீது காசிராஜன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று தமிழழகன் தனது உறவினர்கள் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்த கடல்ராஜா (45), தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த காசிதுரை (31) ஆகியோருடன் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்தார். தமிழழகன் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், காரில் ஏற முயன்றபோது, அங்கு வந்த காசிராஜன், தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் தந்தை தமிழழகன், கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் தாக்கினார்.
இதில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட 3 பேரும் காசிராஜன் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த காசிராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காசிராஜன் வெட்டியதில் காயமடைந்த 3பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், ஏஎஸ்பி சந்தீஸ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்கள் கடல்ராஜா, காசிதுரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

mariappanJun 22, 2022 - 02:38:21 PM | Posted IP 162.1*****