» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் அருகே 15 வயது சிறுமி பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதன் 22, ஜூன் 2022 8:26:03 AM (IST)
ஆலங்குளம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார்(21) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்போதைய ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கானது நெல்லை மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி அன்பு செல்வி குற்றவாளியான பிரவீன் குமார்(21) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் ஜெப ஜீவா மற்றும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கியது
வியாழன் 22, ஜனவரி 2026 5:39:39 PM (IST)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!
வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

சேரன்மகாதேவியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி
புதன் 21, ஜனவரி 2026 8:28:01 PM (IST)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!
புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

