» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ் பாடத்தில் சாதனை: மாணவிக்கு அமைச்சர் பாராட்டு
வியாழன் 23, ஜூன் 2022 7:56:50 AM (IST)
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ௧௦௦ மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவி துர்காவிற்கு தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டுவிட்டர் மூலம், மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் மாணவி துர்காவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியை பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

kumarJun 23, 2022 - 02:17:28 PM | Posted IP 108.1*****