» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்திர எழுத்தரை வெட்டிக் கொல்ல முயன்றவர் கைது
வியாழன் 23, ஜூன் 2022 8:36:08 AM (IST)
சாத்தான்குளத்தில் தொழில் போட்டியில் ஆவண எழுத்தரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஞானமூா்த்திசதீஷ் (25). இவா் 4 ஆண்டுக்கு முன்பு சாத்தான்குளம் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் சி. அழகப்பனிடம் உதவியாளராக இருந்தாராம். பின்னா், அவரை விட்டுப் பிரிந்து அதே பகுதியில் தனது சகோதரா் விக்னேஷுடன் இணைந்து பத்திரம் எழுதும் தொழில் செய்து வந்தாா். அவா் நடத்திவரும் கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளரிடம் அழகப்பன் கூறி வந்தாராம்.
இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று முன்தினம் கடையிலிருந்த ஞானமூா்த்தி சதீஷை, அழகப்பன் தூண்டுதலின் பேரில் சாத்தான்குளம் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (51), அரிவாளால் வெட்ட முயன்றாராம். ஞானமூா்த்தி சதீஷ் கூச்சலிடவே அப்பகுதியினா் திரண்டனா். இதையடுத்து அவருக்கு முத்துராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கத்தை நேற்று கைது செய்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!
சனி 25, ஜூன் 2022 5:00:53 PM (IST)

தபால்காரர்களிடம் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்: அதிகாரி தகவல்!
சனி 25, ஜூன் 2022 4:12:02 PM (IST)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்: டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு
சனி 25, ஜூன் 2022 4:09:57 PM (IST)

மாணவர்களை மாற்றியதைக் கண்டித்து 2வது நாளாக பெற்றோர்கள் போராட்டம் : நெல்லையில் பரபரப்பு!
வெள்ளி 24, ஜூன் 2022 4:10:50 PM (IST)

பள்ளி மாணவி கர்ப்பம்: ஆசிரியரிடம் விசாரணை!
வெள்ளி 24, ஜூன் 2022 12:29:24 PM (IST)

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல் : சிறுவன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!
வெள்ளி 24, ஜூன் 2022 11:36:09 AM (IST)

sejhfkJun 23, 2022 - 11:06:27 AM | Posted IP 162.1*****