» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்திர எழுத்தரை வெட்டிக் கொல்ல முயன்றவர் கைது
வியாழன் 23, ஜூன் 2022 8:36:08 AM (IST)
சாத்தான்குளத்தில் தொழில் போட்டியில் ஆவண எழுத்தரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஞானமூா்த்திசதீஷ் (25). இவா் 4 ஆண்டுக்கு முன்பு சாத்தான்குளம் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் சி. அழகப்பனிடம் உதவியாளராக இருந்தாராம். பின்னா், அவரை விட்டுப் பிரிந்து அதே பகுதியில் தனது சகோதரா் விக்னேஷுடன் இணைந்து பத்திரம் எழுதும் தொழில் செய்து வந்தாா். அவா் நடத்திவரும் கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளரிடம் அழகப்பன் கூறி வந்தாராம்.
இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று முன்தினம் கடையிலிருந்த ஞானமூா்த்தி சதீஷை, அழகப்பன் தூண்டுதலின் பேரில் சாத்தான்குளம் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (51), அரிவாளால் வெட்ட முயன்றாராம். ஞானமூா்த்தி சதீஷ் கூச்சலிடவே அப்பகுதியினா் திரண்டனா். இதையடுத்து அவருக்கு முத்துராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கத்தை நேற்று கைது செய்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

sejhfkJun 23, 2022 - 11:06:27 AM | Posted IP 162.1*****