» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்திர எழுத்தரை வெட்டிக் கொல்ல முயன்றவர் கைது
வியாழன் 23, ஜூன் 2022 8:36:08 AM (IST)
சாத்தான்குளத்தில் தொழில் போட்டியில் ஆவண எழுத்தரை அரிவாளால் வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஞானமூா்த்திசதீஷ் (25). இவா் 4 ஆண்டுக்கு முன்பு சாத்தான்குளம் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த ஆவண எழுத்தா் சி. அழகப்பனிடம் உதவியாளராக இருந்தாராம். பின்னா், அவரை விட்டுப் பிரிந்து அதே பகுதியில் தனது சகோதரா் விக்னேஷுடன் இணைந்து பத்திரம் எழுதும் தொழில் செய்து வந்தாா். அவா் நடத்திவரும் கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளரிடம் அழகப்பன் கூறி வந்தாராம்.
இதனால், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று முன்தினம் கடையிலிருந்த ஞானமூா்த்தி சதீஷை, அழகப்பன் தூண்டுதலின் பேரில் சாத்தான்குளம் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (51), அரிவாளால் வெட்ட முயன்றாராம். ஞானமூா்த்தி சதீஷ் கூச்சலிடவே அப்பகுதியினா் திரண்டனா். இதையடுத்து அவருக்கு முத்துராமலிங்கம் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ஜான்சன் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கத்தை நேற்று கைது செய்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

sejhfkJun 23, 2022 - 11:06:27 AM | Posted IP 162.1*****