» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 3 பேர் கைது

வெள்ளி 24, ஜூன் 2022 11:08:02 AM (IST)

கடையம் அருகே கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள ஐம்பொன் சிலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு மடத்தூர் பகுதியில் கடையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். விசாரணையில், லட்சுமியூரை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. 

மேலும் நடத்திய தீவிர விசாரணையில், ராஜ்குமார், குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற முகமது நசிப், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற சலீம் ஆகியோருடன் சேர்ந்து தேவி சக்தி அம்மன் கோவிலில் இருந்த ஐம்பொன் சிலையை திருடிச் சென்றதும், பல இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory