» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!
சனி 25, ஜூன் 2022 5:00:53 PM (IST)

குற்றாலம் ஐந்தருவியில் ஆர்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட தொடங்கியது. கடந்த சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் மிக குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் இன்று காலை முதல் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அவற்றில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியில் போட்டனர். ஆனால் குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் : டிஆர்ஓ தகவல்
திங்கள் 29, டிசம்பர் 2025 12:18:32 PM (IST)

திருநெல்வேலியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் சுகுமார் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 5:23:34 PM (IST)

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)


