» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்...!
சனி 25, ஜூன் 2022 5:00:53 PM (IST)

குற்றாலம் ஐந்தருவியில் ஆர்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்ட தொடங்கியது. கடந்த சில நாட்களாக அனைத்து அருவிகளிலும் மிக குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் இன்று காலை முதல் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அவற்றில் சுற்றலா பயணிகள் ஆனந்த குளியில் போட்டனர். ஆனால் குற்றாலம் மெயின் அருவியில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகர ஊா்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள்தோ்வு
சனி 30, செப்டம்பர் 2023 12:41:09 PM (IST)

ஏழைகளுக்கு ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
சனி 30, செப்டம்பர் 2023 12:01:06 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவர், ஒண்டி வீரன் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:34:28 PM (IST)

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)

கூடங்குளம் அணுஉலை அருகே கடலில் சிக்கிய இரு நீராவி ஜெனரேட்டர்கள் மீட்பு!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:44:52 PM (IST)

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது புகார்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:03:13 PM (IST)
