» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் சாரல் திருவிழா: நாட்டுப்புறக் கலைஞர்களை உற்சாகப்படுத்திய ஆட்சியர்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:41:46 AM (IST)

குற்றாலம் சாரல் திருவிழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 5ம் தேதி சாரல் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழா வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று ஐந்தருவி வெண்ணமடைகுளம் படகு குழாமில் படகுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கண்டு ரசித்தார். மேலும் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் தனது தலையில் கரகம் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)


