» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் சாரல் திருவிழா: நாட்டுப்புறக் கலைஞர்களை உற்சாகப்படுத்திய ஆட்சியர்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 10:41:46 AM (IST)

குற்றாலம் சாரல் திருவிழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 5ம் தேதி சாரல் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழா வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. விழாவின் நான்காம் நாளான நேற்று ஐந்தருவி வெண்ணமடைகுளம் படகு குழாமில் படகுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் துவக்கி வைத்தார். இந்நிலையில், இன்று குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கண்டு ரசித்தார். மேலும் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் தனது தலையில் கரகம் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

