» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூக்கில் தொங்கவிடப்பட்ட ஆ.ராசா உருவபொம்மை: நெல்லையில் பரபரப்பு

சனி 17, செப்டம்பர் 2022 10:03:21 AM (IST)



நெல்லையில் திமுக எம்பி ஆ.ராசாவின் உருவபொம்மை தூக்கிலிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நெல்லை வி.எம்.சத்திரம் நான்கு வழிச்சாலை பாலத்தில் நடுவில், ஆ.ராசாவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டுள்ளனர். அதன் அருகே "இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திமுக எம்பி ஆ.ராசாவை தூக்கிலிடு - இந்துமுன்னணி" என்ற வாசகம் அடங்கிய அட்டை தொங்கவிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் நெல்லையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory