» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூக்கில் தொங்கவிடப்பட்ட ஆ.ராசா உருவபொம்மை: நெல்லையில் பரபரப்பு
சனி 17, செப்டம்பர் 2022 10:03:21 AM (IST)
நெல்லையில் திமுக எம்பி ஆ.ராசாவின் உருவபொம்மை தூக்கிலிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நெல்லை வி.எம்.சத்திரம் நான்கு வழிச்சாலை பாலத்தில் நடுவில், ஆ.ராசாவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டுள்ளனர். அதன் அருகே "இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திமுக எம்பி ஆ.ராசாவை தூக்கிலிடு - இந்துமுன்னணி" என்ற வாசகம் அடங்கிய அட்டை தொங்கவிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.