» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி கைது!

சனி 17, செப்டம்பர் 2022 4:21:43 PM (IST)

நெல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை  போலீசார் கைது செய்தனர். 

தர்மபுரியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலையில் நெல்லை வந்தார். அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கு வந்த பஸ்சில் பதற்றத்துடன் ஏற முயன்றார். அப்போது தவறி கீழே விழ முயன்ற அவருக்கு அந்த நபர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

ndfgbjdkfjSep 17, 2022 - 10:24:19 PM | Posted IP 162.1*****

super police

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory