» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்
ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:33:25 PM (IST)
நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று18-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
நெல்லை சந்திப்பில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் நெல்லை -மேட்டுப்பாளையம் ரயில் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதைப்போல் தற்போது நெல்லை -தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பில் இருந்து இந்த ரயில் இன்று 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06004) 18-ந் தேதி முதல் வருகிற ஜனவரி மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் (06003) தாம்பரத்திலிருந்து நாளை முதல் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ரெயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்துடன், அதாவது 1.3 மடங்கு அதிக கட்டணத்துடன் இயக்கபட்டாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரு சிறப்பு ரயில்கள் மூலமாக இந்த 3 மாதங்களில் ரூ.2.5 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்து உள்ளது.
எனவே வருமானம் கொழிக்கும் இந்த வழித்தடத்தில் தற்போது இயக்கப்படும் நெல்லை -மேட்டுப்பாளையம், நெல்லை -தாம்பரம் ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
