» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நண்பனை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:25:27 AM (IST)

கீழப்பாவூர் அருகே நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம்,  பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் இல்லத்து பிள்ளைமார் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமி (33). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சாஸ்தா (36). நண்பர்களான இவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். 

மாலையில் வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பும்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சாமி கத்தரிக்கோலால் சாஸ்தாவை குத்தியுள்ளார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory