» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மோட்டர்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
புதன் 21, செப்டம்பர் 2022 10:04:09 AM (IST)
பழைய குற்றாலத்தில் மின் மோட்டார்களை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் அருகில் அமைந்துள்ள கோழி பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அதன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆய்வாளர் தாமஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோமதி நாதன் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி மின் மோட்டார்களை திருடிய மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ரகு குமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் முருகன் (25) ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.