» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மோட்டர்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
புதன் 21, செப்டம்பர் 2022 10:04:09 AM (IST)
பழைய குற்றாலத்தில் மின் மோட்டார்களை திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய குற்றாலம் அருகில் அமைந்துள்ள கோழி பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூபாய் 80,000 மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அதன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆய்வாளர் தாமஸ் தலைமையில் சார்பு ஆய்வாளர் கோமதி நாதன் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி மின் மோட்டார்களை திருடிய மேலகரம் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவரின் மகன் ரகு குமார்(23) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் முருகன் (25) ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)
