» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மருத்துவ சமுதாயத்தை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும்: மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை
புதன் 21, செப்டம்பர் 2022 10:23:17 AM (IST)
மருத்துவ சமுதாயத்தை பழங்குடியினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்க சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றாலத்தில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நட்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் ராஜன், பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ சமுதாயத்தினர் 80 லட்சம் பேர் உள்ளனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை எங்கள் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே எங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்ட சமூகமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தோம். அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதனை தொடர்ந்து 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பழங்குடியினமாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அதனை அரசு நிறைவேற்றி தரவேண்டும். தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளிக்கு ரூ.5 ஆயிரம் என ஒப்பந்தம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
அது ஒரு நபருக்கு தான் கிடைக்கிறது. மற்ற தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் அல்லது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்படி பரிசீலனை செய்ய வேண்டும். செவிலியர் மற்றும் சித்த மருத்துவக் கல்லூரிகளில் எங்கள் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக கடையநல்லூர் கே.ரவி, செயலாளராக குற்றாலம் கே. பண்டார சிவன், பொருளாளராக குற்றாலம் டி.எஸ். முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
