» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திங்கள் 26, செப்டம்பர் 2022 8:15:53 AM (IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்களின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மற்றும் அதன் தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் முகமது ஜான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி பைஜி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல்காதர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் அப்துல் மஜித்இ எஸ்.டி.பி.ஐ. கட்சி காதர் மைதீன் மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

PODHU JANAMSep 26, 2022 - 04:54:39 PM | Posted IP 162.1*****