» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திங்கள் 26, செப்டம்பர் 2022 8:15:53 AM (IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்களின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மற்றும் அதன் தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் முகமது ஜான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி பைஜி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல்காதர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் அப்துல் மஜித்இ எஸ்.டி.பி.ஐ. கட்சி காதர் மைதீன் மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடரும் : நெல்லையில் சீமான் பேட்டி!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:10:51 PM (IST)

நெல்லை மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:21:12 AM (IST)

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)





PODHU JANAMSep 26, 2022 - 04:54:39 PM | Posted IP 162.1*****