» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:15:59 AM (IST)

தருமபுரியில் நடைபெற்ற விழாவில் புதூர் பள்ளிகளை சேர்ந்த வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பசுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா தா்மபுரியில் நடந்தது. பசுமை மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 51 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனை சேர்ந்த புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி வேளாண் ஆசிரியர் காளிராஜ், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் "பசுமை ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீசாரைத் தாக்க முயன்றதாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு: எஸ்.ஐ., மண்டை உடைந்தது!
புதன் 8, ஏப்ரல் 2026 8:38:27 AM (IST)

எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

புழல் சிறையிலிருந்து தாக்கல்:ஹரி நாடார் மனு தள்ளுபடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)


KVP kumarSep 27, 2022 - 01:00:58 PM | Posted IP 162.1*****