» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:15:59 AM (IST)

தருமபுரியில் நடைபெற்ற விழாவில் புதூர் பள்ளிகளை சேர்ந்த வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பசுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா தா்மபுரியில் நடந்தது. பசுமை மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 51 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனை சேர்ந்த புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி வேளாண் ஆசிரியர் காளிராஜ், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் "பசுமை ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா : தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!
வியாழன் 1, ஜனவரி 2026 12:35:05 PM (IST)

அரசுப் பேருந்துகளுக்கு பாஸ்டேக்கில் தேவையான இருப்பு உள்ளது : பொதுமேலாளர் தகவல்
புதன் 31, டிசம்பர் 2025 4:06:18 PM (IST)

நெல்லை சரக புதிய டிஐஜியாக சரவணன் நியமனம்!
புதன் 31, டிசம்பர் 2025 12:19:33 PM (IST)

நெல்லை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.2 இலட்சம் நன்கொடை!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:15:31 PM (IST)

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் : டிஆர்ஓ தகவல்
திங்கள் 29, டிசம்பர் 2025 12:18:32 PM (IST)



KVP kumarSep 27, 2022 - 01:00:58 PM | Posted IP 162.1*****