» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மீன் லோடு ஏற்றிச் சென்ற ஆட்டோ கடலில் மூழ்கியது: டிரைவர் உயிர்தப்பினார்
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 12:14:43 PM (IST)

குளச்சலில் மீன் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பாபின். இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் "லோடு ஆட்டோ" வாகனத்தை மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் ரெஜி என்பவர் ஓட்டி வருகிறார். இன்று காலை டிரைவர் ரெஜி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி டாடா ஏஸ் வாகனம் மூலம் ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
வாகனத்தில் மீன்களை ஏற்றி கொண்டு ஏலக்கூடத்திற்கு சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடல் பகுதியை நோக்கி உருண்டு ஓடியது இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரெஜி வாகனத்தில் இருந்து வெளியே குதித்த நிலையில் வாகனம் கடலில் விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பிய நிலையில் மீன் பாரத்துடன் கடலில் விழுந்த லோடு ஆட்டோ முழுவதுமாக கடலில் மூழ்கியது இதனையடுத்து அந்த வாகனம் மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி கிரைன் மூலம் மீட்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர் : சாதனை படைக்கும் சிங்கப்பெண்!!
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)


