» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மீன் லோடு ஏற்றிச் சென்ற ஆட்டோ கடலில் மூழ்கியது: டிரைவர் உயிர்தப்பினார்
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 12:14:43 PM (IST)

குளச்சலில் மீன் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பாபின். இவருக்கு சொந்தமான டாடா ஏஸ் "லோடு ஆட்டோ" வாகனத்தை மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் ரெஜி என்பவர் ஓட்டி வருகிறார். இன்று காலை டிரைவர் ரெஜி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி டாடா ஏஸ் வாகனம் மூலம் ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
வாகனத்தில் மீன்களை ஏற்றி கொண்டு ஏலக்கூடத்திற்கு சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடல் பகுதியை நோக்கி உருண்டு ஓடியது இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரெஜி வாகனத்தில் இருந்து வெளியே குதித்த நிலையில் வாகனம் கடலில் விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பிய நிலையில் மீன் பாரத்துடன் கடலில் விழுந்த லோடு ஆட்டோ முழுவதுமாக கடலில் மூழ்கியது இதனையடுத்து அந்த வாகனம் மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி கிரைன் மூலம் மீட்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
