» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் செப்.28ல் ரேபிஸ் தடுப்பூசி முகாம்!
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 3:11:23 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி செல்லப் பிராணிகளுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 28.09.2022-அன்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி, கால்நடை பன்முக மருத்துவமனை உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்லப் பிராணிகளை ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)





tuticorianSep 27, 2022 - 04:12:45 PM | Posted IP 162.1*****