» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் வெறிச்செயல்!
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:43:08 PM (IST)
செங்கோட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ் (35). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அவரது மாமனார் முருகேசன் வந்துள்ளார். 2 பேரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் முருகேசன் திடீரென பத்மாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதுதொடர்பாக புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். முருகேசன் அப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் தெருக்களுக்கு குடிதண்ணீர் திறந்துவிடும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் இசக்கிராஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் வளர்ப்பு தந்தையான முருகேசன் தனது 2-வது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆனதில் இருந்தே மருமகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

