» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்: ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் வெறிச்செயல்!
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 4:43:08 PM (IST)
செங்கோட்டை அருகே இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாமனார் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ் (35). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் மத்தளம்பாறையை சேர்ந்த பத்மாவதி(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு அவரது மாமனார் முருகேசன் வந்துள்ளார். 2 பேரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் முருகேசன் திடீரென பத்மாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதுதொடர்பாக புளியரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து முருகேசனிடம் விசாரணை நடத்தினர். முருகேசன் அப்பகுதியில் பஞ்சாயத்து சார்பில் தெருக்களுக்கு குடிதண்ணீர் திறந்துவிடும் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் இசக்கிராஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அவரது முதல் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் வளர்ப்பு தந்தையான முருகேசன் தனது 2-வது மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆனதில் இருந்தே மருமகளை தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் திமுக பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்: சொத்துவரி தாமதமாக செலுத்தியதால் அதிரடி!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:38:04 AM (IST)

நெல்லை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது : வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 8:35:20 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)
