» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை
சனி 3, டிசம்பர் 2022 10:21:45 AM (IST)

தென்காசியில் ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி குத்துக்கல்வலசை கே.ஆர்.காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவருடைய மனைவி மகேஸ்வரி. இவர் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
மகேஸ்வரி இரவில் தூங்கும் முன்பு கதவை பூட்டாமல் திறந்து வைத்து உள்ளார். இதனால் மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவிக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கல்
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:29:06 PM (IST)

நெல்லையில் வக்கீல் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:24:37 AM (IST)

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக துரை. இரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:04:57 AM (IST)

வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)

நெல்லையை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை - புதிய ஆட்சியர் பேட்டி
திங்கள் 6, பிப்ரவரி 2023 7:55:19 AM (IST)

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு அறிவியல் இன்ஸ்பயர் விருது
சனி 4, பிப்ரவரி 2023 5:41:07 PM (IST)

சாமான்யன்Dec 3, 2022 - 02:03:12 PM | Posted IP 59.91*****