» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி வாலிபர் பலி
ஞாயிறு 5, பிப்ரவரி 2023 5:54:24 PM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ஜெயராஜ் மகன் அந்தோணி துரைராஜ் (33), இவர் நேற்று அந்தோணியார் புரம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது நெல்லையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த ஒரு கார் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குமார் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
PEOPLEFeb 7, 2023 - 12:22:08 PM | Posted IP 162.1*****