» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை - புதிய ஆட்சியர் பேட்டி
திங்கள் 6, பிப்ரவரி 2023 7:55:19 AM (IST)
பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாசில்தார்கள் ஆனந்த பிரகாஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரலாற்று சிறப்புமிக்க நெல்லையின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டதில் மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும். பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது மக்களினுடைய கோரிக்கைகள், கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

MauroofFeb 6, 2023 - 12:35:17 PM | Posted IP 162.1*****