» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை

திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)

திசையன்விளை அருகே மனைவி மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பிவிட்டு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தற்கொலை செய்ய முடிவு செய்து, தான் விஷம் குடிக்கும் தகவலை தனது உறவினர்கள், பெற்றோர், மனைவி உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளார் என்ற விபரம் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory