» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு விவசாயி தற்கொலை
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:16:18 PM (IST)
திசையன்விளை அருகே மனைவி மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக தகவல் அனுப்பிவிட்டு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியை சேர்ந்தவர் சிவக்குமார்(46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சமீபகாலமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தற்கொலை செய்ய முடிவு செய்து, தான் விஷம் குடிக்கும் தகவலை தனது உறவினர்கள், பெற்றோர், மனைவி உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி உள்ளார் என்ற விபரம் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் பெருமிதம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 10:48:02 AM (IST)

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

