» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி : அம்பை அருகே சோகம்!!
புதன் 29, மார்ச் 2023 11:44:57 AM (IST)
அம்பை அருகே, செல்போன் பேசியபடி சென்ற வாலிபர் இடி-மின்னல் தாக்கியதில் இறந்தார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயில் வாட்டி எடுக்கிறது. இதேபோல் நேற்று காலையிலும் நெல்லையில் கடும் வெயில் அடித்தது. மதியம் 2 மணியளவில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் நீடித்தது.
இந்தநிலையில் அம்பை பகுதியில் இடி-மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் இறந்தார். அவருடைய பெயர் சின்னராஜா (36). அம்பை சோலைபுரம் அருகில் உள்ள தோணித்துறையைச் சேர்ந்த சீவலமுத்து மகன் ஆவார். விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று மாலையில் வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தனது செல்போனில் அழைப்பு வரவே எடுத்து பேசும்போது, திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். குளிக்க சென்றவர் மின்னல் தாக்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த சின்னராஜா உடலை கைப்பற்றி அம்பை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)
