» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:04:39 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் திருப்பத்தூரில் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருடைய மகன் விக்னேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விக்னேஷ், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவரின் செல்போனை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது போனை எடுத்த 16 வயது சிறுமிக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவிக்னேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)
