» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:04:39 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் திருப்பத்தூரில் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவருடைய மகன் விக்னேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விக்னேஷ், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவரின் செல்போனை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது போனை எடுத்த 16 வயது சிறுமிக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் கடந்த ஆண்டு புகார் செய்யப்பட்டது. போலீசார் போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவிக்னேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விக்னேஷ் மீது மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்பாடு: நெல்லை மண்டலத்தில் 250 அரசு சிறப்பு பஸ்கள்!
ஞாயிறு 4, ஜூன் 2023 5:14:58 PM (IST)

நாட்டுக்கோழி வளர்க்க மானியம் : ஆட்சியர் தகவல்
சனி 3, ஜூன் 2023 4:04:53 PM (IST)

கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்ற கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சனி 3, ஜூன் 2023 12:50:00 PM (IST)

கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)

கொள்ளையடிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழாசிரியர் முன்னணி கோரிக்கை!
வெள்ளி 2, ஜூன் 2023 5:44:28 PM (IST)
