» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிறுபான்மை ஆணைய தலைவர்

புதன் 31, மே 2023 8:29:44 PM (IST)



தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும்,தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, , மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் இன்று(31.05.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,107 பெண்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் தையல் இயந்திரங்களும்,16 பெண்களுக்கு மாவு ஆட்டும் இயந்திரங்களும், 14 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும்,11 பெண்களுக்கு குடிசை தொழில் உதவிகளுமாக ரூபாய் 13,54,200 மதிப்பில் 149 பயனாளிகளுக்கு உதவியும், மாவட்டத்தில் தழிழ் வழி கல்வியில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவர்களுக்கு, கடையநல்லூர்ஷப்ரின் இமானா 590, செங்கோட்டை கலைச்செல்வி 583,சங்கரன்கோயில் முத்துலட்சுமி 583, தென்காசி, கார்த்திகா 582 ஆகியோர்களுக்கு பரிசுகளையும், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.

நிகழ்ச்சியில்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட பஞ்சாயத்து குழுத் தலைவர் தமிழ் செல்வி போஸ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஷேக் அப்துல்லா,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், உதவி மக்கள் தொடர்பாளர் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், கவுரவ செயலாளர் முகம்மது ஸலீம்,டாக்டர் அப்துல் அஜீஸ், டாக்டர்.ஆமீர்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory