» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்சிடம் 55 கிராம் தங்க செயின் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 1, ஜூன் 2023 10:24:29 AM (IST)
சுரண்டை பஸ் நிலையம் அருகில் நர்சிடம் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் மனைவி புஷ்பா (55). இவர் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் சுரண்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென்று புஷ்பா கழுத்தில் கிடந்த 55 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி செயின் பறித்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.