» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோடைகாலத்தில் வீணாகும் தண்ணீர்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வியாழன் 1, ஜூன் 2023 10:50:20 AM (IST)
திருநெல்வேலியில் கோடைகாலத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பேட்டை காமராஜ் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமராஜர் நினைவு மேல்நிலை நீர் நிலை தொட்டியில் இருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் மேலே இருந்து சிந்தி வீணாகிறது. கோடை காலங்களில் அணைக்கட்டுகளில் தண்ணீர் குறைவாக உள்ள நேரத்தில் இவ்வாறு தண்ணீர் வீணாக்குவது மிகவும் வேதனைக்கு உள்ளாகிறது.
அங்கு இருப்பவரிடம் கேட்டதற்கு கடந்த ஒரு மாத காலமாக இவ்வாறு தண்ணீர் வீணாக செல்கிறது என்று கூறினார். மேலும் இனி வருங்காலங்களில் தண்ணீர் வீணாகுவதை தடுக்க குழாயை சரி செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் & நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.