» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோடைகாலத்தில் வீணாகும் தண்ணீர்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

வியாழன் 1, ஜூன் 2023 10:50:20 AM (IST)

திருநெல்வேலியில் கோடைகாலத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி பேட்டை காமராஜ் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமராஜர் நினைவு மேல்நிலை நீர் நிலை தொட்டியில் இருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் மேலே இருந்து சிந்தி வீணாகிறது. கோடை காலங்களில் அணைக்கட்டுகளில் தண்ணீர் குறைவாக உள்ள நேரத்தில் இவ்வாறு தண்ணீர் வீணாக்குவது மிகவும் வேதனைக்கு உள்ளாகிறது. 

அங்கு இருப்பவரிடம் கேட்டதற்கு கடந்த ஒரு மாத காலமாக இவ்வாறு தண்ணீர் வீணாக செல்கிறது என்று கூறினார். மேலும் இனி வருங்காலங்களில் தண்ணீர் வீணாகுவதை தடுக்க குழாயை சரி செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் & நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர்  ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory