» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் நகை கொள்ளை : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!!
வியாழன் 1, ஜூன் 2023 11:28:08 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் நோபிள் கிறிஸ்துராஜ் (48). கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த கொலுசு, செயின் உட்பட ரூ.1லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருட்டுJun 3, 2023 - 02:17:01 PM | Posted IP 162.1*****