» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் நகை கொள்ளை : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!!

வியாழன் 1, ஜூன் 2023 11:28:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் நோபிள் கிறிஸ்துராஜ் (48). கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த கொலுசு, செயின் உட்பட ரூ.1லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

திருட்டுJun 3, 2023 - 02:17:01 PM | Posted IP 162.1*****

பரம்பரைகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory