» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் நகை கொள்ளை : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!!
வியாழன் 1, ஜூன் 2023 11:28:08 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்தவர் நோபிள் கிறிஸ்துராஜ் (48). கடந்த 30ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த கொலுசு, செயின் உட்பட ரூ.1லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழரசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருட்டுJun 3, 2023 - 02:17:01 PM | Posted IP 162.1*****